Saturday, 23 November 2013

என் கடமை


வளரிளம் பருவம் வாழ்வின் “ஆடி- நல்

“பழக்க விதைகளை விதைக்கணும் தேடி –இங்கே

களர்நிலம் போன்ற மானிடர் கோடி – எவரும்

கடமை மீறினால் சேரும் காரிருள் நாடி!!!

இலக்கணமின்றி இலக்கி யமுண்டோ?

இலட்சியமின்றி வாழ்வு தானுண்டோ?

சிலகணமாயினும் சிந்தித்தே –நாம்

வகுக்கணும் நமது  வாழ்வு தனையே!!

வெல்லமா யிருப்பினும் வீதியில் உண்கிலேன் – என்

கொல்லைப்  புறத்திலும் குப்பையை சேர்க்கிலேன்.

கொல்லும் வியாதிதரும் கொசுவையும் ஒழிக்க – நான்

ஒல்லும் வகையெலாமென் சூழலை மாற்றுவேன்  

உள்ளத் தூய்மையுடன் உடலையும் பேணுவேன்

இன்சொலும் நன்செயலும் மீறினால் நாணுவேன்

நல்ல மனிதரின் நட்பையே நாடுவேன்

நானிலம் போற்றிட நானிங்கே வாழுவேன்!!!

No comments:

Post a Comment